என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜ.க. கவுன்சிலர் மஞ்சுஷா நாக்புரே புனே மேயராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைந்த மகராஷ்டிர துணை முதல்வரும், புனே மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான அஜித் பவார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், புனே எம்.பியுமான சுரேஷ் கல்மாடி ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் நடத்தி மரியாதை செலுத்தும் விதமாக, அரசியல் கட்சிகள் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று புனே மாநகராட்சி பா.ஜ.க. குழுத் தலைவர் கணேஷ் பிட்கர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, என்.சி.பி.யைச் சேர்ந்த ஷீத்தல் சாவந்த் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்வினி லாண்ட்கே ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த புனே மாநகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) தலைவர் பர்சுராம் வடேகர் புனே துணை மேயராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.