ஆர்.​எஸ்.​எஸ். நிகழ்ச்​சி​யில் நடிகர் சல்​மான் கான் கலந்து கொண்​டது கட்​டா​யத்​தின் பேரிலா அல்லது மனமாற்​றமா என சிவ சேனா (உத்​தவ்) மூத்த தலை​வர் சஞ்​சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீபத்​தில் நடை​பெற்ற ஆர்.​எஸ்.​எஸ். நிகழ்ச்​சி​யில் நடிகர் சல்​மான் கான் கலந்து கொண்​டார். இது ஒரு உண்​மை​யான நல்​லெண்ண முயற்​சியா அல்​லது மாறிவரும் அரசி​யல் சூழலில் தங்​களைத் தக்க​வைத்​துக் கொள்​ளும் விரக்தி முயற்​சி​யா? வெறும் கூட்​டத்​தைக் கூட்ட அவர் அழைத்து வரப்​பட்​டாரா அல்​லது ஆர்​.எஸ்​.எஸ். அமைப்பில் இப்​போது முஸ்​லிம்​களும் வரவேற்​கப்​படு​கிறார்​கள் என்பதைக் காட்ட அழைக்​கப்​பட்​டா​ரா? இதற்கு ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்​கம் அளிக்க வேண்​டும். இந்த அழைப்பு மனமாற்​றத்​தால் வந்​ததல்ல, கட்​டா​யத்​தால் வந்தது என்று மக்​கள் பேசிக் ​கொள்கின்றனர். என்ன செய்​வது சகோ​தரரே, போய்த்​தான் ஆக வேண்​டும் என்று அங்கே மக்​கள் கிசுகிசுப்​பதை கேட்க முடிந்​தது. இவ்​வாறு அவர் கூறினார்.