சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் ஷங்கர், காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர,

1. தேஜஸ்வின் சங்கர் - தடகளம்

2. முகமது அஜ்மல் — தடகளம்

3. பிரியங்கா கோஸ்வாமி — தடகளம்

4. ட்ரீசா — பேட்மிண்டன்

5. காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன்

6.நரேந்தர் — குத்துச்சண்டை

7.விதித் சந்தோஷ் - செஸ்

8. திவ்யா ஜிதேந்திர தேஷ்முக் - செஸ்

9. தனுஷ் ஸ்ரீகாந்த் — காது கேளாதோர் துப்பாக்கிச் சூடு

10.லால்ரெம்சியாமி — ஹாக்கி

11. ராஜ்குமார்— ஹாக்கி

12. சுர்ஜீத் — கபடி

13. பூஜா — கபடி

14.ருத்ரன்ஷ் கண்டேல்வால் - பாரா-ஷூட்டிங்

15.ஏக்தா பியான் — பாரா தடகளம்

16. அரவிந்த் சிங் — படகுப்போட்டி

17.அகில் ஷியோரன் — துப்பாக்கிச் சூடு

ஆகியோருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே போல், விளையாட்டுப்பயிற்சியாளர்கள் 1.பர்வீர் சிங் - தடகளம், 2.சோட்டே லால் யாதவ் - குத்துச்சண்டை, 3.நேஹா நந்த்குமார் சவான் - துப்பாக்கி சுடுதல், 4.தர்மேந்திர சிங் யாதவ் -குத்துச்சண்டை (வாழ்நாள் சாதனை), 5.விரேந்தர் குமார் - மல்யுத்தம் (வாழ்நாள் சாதனை) ஆகிய 5 பேர் துரோணாச்சார்யார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.