சென்னை: தீபாவளிக்கு முன்னதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கிளம்​பாக்​கம் ரயில் நிலை​யத்தை பேருந்து நிலை​யத்​துடன் இணைக்​கும் வகை​யில், ஜிஎஸ்டி சாலை​யில் ஆகாய நடை​பாதை பணி​கள் மாநில அரசு தரப்​பில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. குறிப்​பாக, ரயில் நிலை​யத்​தோடு இணைக்க வேண்​டிய பணி​கள் மீதம் இருக்​கின்​றன. பணி​களை முடித்​து, நடப்​பாண்​டில் தீபாவளிக்கு முன்​பாகவோ அல்​லது தீபாவளிக்கு பிறகோ கிளாம்​பாக்​கம் புறநகர் ரயில் நிலை​யம் திறக்க வாய்ப்​புள்​ளது. சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு 2-வது ஏசி மின்​சார ரயில் ஒரு மாதத்​தில் பயன்​பாட்​டுக்கு கொண்ட வர திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என்றார்.

ரயில்வே கோட்ட கூடு​தல் மேலா​ளர் செந்​தில்​கு​மார் கூறும்​போது, “சென்னை கோட்​டம் கடந்த நிதி​யாண்​டில் இது​வரை இல்​லாத அளவுக்கு ரூ.5 ஆயிரத்து 38 கோடி வரு​வாய் எட்​டி​யுள்​ளது. 11.330 மில்​லியன் டன் சரக்​கு​கள் கையாளப்​பட்​டுள்​ளன. 26 ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் முழு​வது​மாக பொருத்​தப்​பட்​டுள்​ளன. எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.720 கோடி​யில் மறுசீரமைப்பு பணி​கள் நடை​பெறுகின்​றன. இப்​பணி​கள் அனைத்​தும் அடுத்த ஆண்டு மார்ச்​சில் முடிக்​கப்​படும்” என்​றார்.