திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புதிய நிர்​வாக அதி​காரி​யாக மூத்த ஐ.ஏ.எஸ். அதி​காரி எம். ர​விச்சந்​திரா பதவி​யேற்​றார்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக அனில் குமார் சிங்​கால் பதவி வகித்து வந்தார். இவர் முந்​தைய ஜெகன் மோகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நடந்த கலப்பட நெய் விவ​காரத்​தில் அப்​போதைய அறங்​காவலர் குழு தீர்​மானங்​களை தடுக்​காமல் அலட்​சி​யப் போக்கை கடைபிடித்​தார் என சிறப்பு புல​னாய்வு குழு கருத்து தெரி​வித்​தது. இதன் அடிப்படையில் அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து அமராவ​தி​யில் சி.எம்.ஓ. அலு​வல​கத்​தில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு முக்​கிய செய​லா​ள​ராக பணி​யில் இருந்த எம்​. ர​விச்சந்​தி​ரா, திருப்​பதி தேவஸ்​தான புதிய நிர்​வாக அதிகாரியாக நியமனம் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில் ஏழு​மலை​யான் கோயி​லில் உள்ள ரங்கநாயக மண்​டபத்​தில் அவர் பதவி​யேற்​றார்.

முன்​ன​தாக அவர் தனது மனை​வி​யுடன் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். அவருக்கு தேவஸ்தான கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கய்ய சவுத்ரி தீர்த்த பிர​சாதங்​கள் வழங்கி கவுரவித்தார். புதிய நிர்​வாக அதி​காரி: ரவிச்சந்திரா கூறுகையில்,

தேவஸ்தானஅறங்​காவலர் குழு, மூத்த அதிகாரி​கள் மற்​றும் பக்​தர்​களின் கருத்​துகளை கேட்டறிந்து, பக்​தர்​களின் மனம் புண்​ப​டாத வகை​யில் செயல்​படு​வேன். ஏழுமலை​யானுக்கு சேவை செய்​யும் இந்த பாக்​கி​யத்தை வழங்​கிய ஆந்​திர முதல்​வருக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன் என்​றார்.