ஈரானில் பெண்கள் இனி மோட்டார்சைக்கிள் ஓட்டுவதற்கான உரிமம் பெறலாம் என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இரு சக்கர வாகனங்கள் தொடர்பான பல ஆண்டுகால சட்டரீதியான தெளிவற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, பெண்கள் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஓட்டுவதை சட்டம் வெளிப்படையாகத் தடை செய்யவில்லை, ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் உரிமங்களை வழங்க மறுத்து வந்தனர். ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது ரெசா அரேப், போக்குவரத்து சட்டத்தை தெளிவுபடுத்தும் நோக்கில் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டார்.
இந்த தீர்மானம் ஜனவரி மாத இறுதியில் ஈரானிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்று அந்நாட்டின் இல்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம், போக்குவரத்து காவல் துறையினரை பெண் விண்ணப்பதாரர்களுக்கு நடைமுறை பயிற்சி அளிக்கவும், காவல் துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு தேர்வை ஏற்பாடு செய்யவும், பெண்களுக்கு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உரிமங்களை வழங்கவும் கட்டாயப்படுத்துகிறது என்று இல்னா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.