தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கை​யில், ஏழை, எளிய மக்களின் வாழ்​வா​தா​ர​மாக விளங்​கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதியளிப்புச் சட்​டத்தை சிதைக்​கும் நோக்​கத்​தோடு செயல்​படும் பா.ஜ.க. அரசை கண்​டித்​து, அகில இந்​தியகாங்​கிரஸ் கமிட்​டி​யின் அறி​வுறுத்​தலின்​படி தமிழகம் முழு​வதும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதன் தொடர்ச்​சி​யாக, 5-ம் தேதி(இன்று) மதி​யம் 2 மணி​யள​வில் எனது தலை​மை​யில் சென்​னை, திரு​வள்​ளூர், ஆவடி, செங்​கல்​பட்டு, காஞ்​சி மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி தலை​வர்​கள் முன்னிலை​யில் நடைபயணம், கிழக்கு தாம்​பரம் - பாரத மாதா தெரு, வேளச்​சேரி சாலை சந்திப்பில் அமைந்​துள்ள காம​ராஜர் சிலை அரு​கி​லிருந்​து, மேற்கு தாம்​பரம் - சண்​முகம் சாலை வரை நடை​பெறவுள்​ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதே​ போன்​று, வரும் 7-ம் தேதி திருச்​சி​யிலும், 8-ம் தேதி திண்​டுக்​கல்​லிலும், 9-ம் தேதி தென்​காசி​யிலும், 12-ம் தேதி கோவை​யிலும் நடைபயணம் நடை​பெறும். இவ்​வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.