தஞ்சாவூர் மாவட்டத்தி்ல் நேற்று நடைபெற்ற அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினா். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறி இருந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் தினகரன் பேசியுள்ளார். இதனால், விஜய் கட்சியில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நமக்கு எம்.பி, எம்.எல்.ஏ. எண்ணிக்கை முக்கியமல்ல, லட்சியமே முக்கியம். அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தினகரனின் கூாரம் காலியகி விட்டது என நம்மை விமர்சித்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கின்றனர். தெளிந்த நீரோடை போல செயல்பட்டு கொண்டிருக்கும் அ.ம.மு.க.வால்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
யாரிடமும் எதற்காகவும் சமரசம் செய்யாத இரும்புப் பெண்மணியின் பெயரில் அ.ம.மு.க. இயங்கிக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் அ.ம.மு.க. கைகட்டுபவர் தான் முதலமைச்சர் என்பது இயற்கை எழுதியுள்ள தீர்ப்பு. தமிழகத்தில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. அங்கம் வகிக்கும். உங்களன் மன ஓட்டம் என்ன என்பதை அறிந்து நிச்சயம் வெற்றிக் கூட்டணியில் இணைவோம். மதம், சாதி, கடவுள் பெயரில் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் எடுபடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.