திரு​மலையில் ரத சப்​தமி விழா நாளை 25-ம் தேதி கொண்டாடப்பட உள்​ளது. இதனையொட்​டி, திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர். நாயுடு தலை​மை​யில் உயர் மட்ட அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடந்​தது. அப்​போது பி.ஆர். நாயுடு பேசி​ய​தாவது,

பிரம்​மோற்​சவம், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து மிகப்​பெரிய விழா​வான ரதசப்​தமி திருவிழா​வை வெற்​றிகர​மாக நிறைவேற்ற திட்டமிடப்பட்​டுள்​ளது. அதி​காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 7 வாகனங்​களில் உற்​சவ​ரான மலை​யப்​பர் திரு​வீதி உலா நடைபெற உள்​ளது. இடையே மதி​யம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்​சி​யும் நடை​பெற உள்​ளது. இதனால் நாளை 25-ம் தேதி அனைத்து ஆர்​ஜித சேவை​களும் ரத்து செய்யப்பட்​டுள்​ளது.

சர்வ தரிசன டோக்​கன் விநி​யோக​மும் 24, 25, 26-ம் தேதி​களுக்கு ரத்து செய்யப்​படு​கிறது. ரதசப்​தமிக்கு திரு​மலைக்கு வரும் பக்​தர்​களுக்கு 14 வகை உணவுகள் தயாரிக்​கப்பட உள்​ளன. மாட வீதி​களில் 24 மணி நேரமும் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம், குடிநீர், பால் போன்​றவை தொடர்ந்து வழங்க ஏற்​பாடு​ செய்​யப்​பட்​டுள்​ளது. 3,700 ஸ்ரீ வாரி சேவகர்​கள் தன்னார்வ தொண்டு ஆற்ற நியமனம் செய்யப்பட்டுள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.