ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வழிவகை செய்யப்படும் என்றும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உயர் தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் மதுரை அலங்காநல்லூரில் அமைக்கப்படும் என அறிவித்தமைக்காக சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.