சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேரும், வீரதீர செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேரும், உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்து 604 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* ஜெ.விஜய் ஆனந்த், கூடுதல் எஸ்பி
* கே.ராமச்சந்திரன், கூடுதல் எஸ்பி
* எஸ்.குமார், உதவி கமாண்டண்ட்
உள்துறை அமைச்சகத்தின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
* மாலதி, இன்ஸ்பெக்டர்.
* பாஸ்கர்- சப் இன்ஸ்பெக்டர்
* சிவசங்கர்- ஏஎஸ்பி
* சோமசுந்தரம்- ஏஎஸ்பி
* கோவிந்தராஜூ- ஏஎஸ்பி
* சண்முகம்- டிஎஸ்பி
* பத்தருன்னிசா பேகம்- இன்ஸ்பெக்டர்
* மதிமாறன்- இன்ஸ்பெக்டர்
* சரஸ்வதி- இன்ஸ்பெக்டர்
* மாரியப்பன்- இன்ஸ்பெக்டர்
* லெட்சுமி-இன்ஸ்பெக்டர்
* ஜெயா இளவரசி- இன்ஸ்பெக்டர்
* கோபால்-இன்ஸ்பெக்டர்
* மணிமாறன்- உதனி கமாண்டன்ட்
* லட்சுமி- இன்ஸ்பெக்டர்
* செந்தில்குமார்- சப் இன்ஸ்பெக்டர்
* சதுரகிரி- சப் இன்ஸ்பெக்டர்
சிபிஐ ஏட்டுவுக்கு பதக்கம்
இதேபோல, சிபிஐயில் நாடு முழுவதும் சிறப்பான பணியாற்றிய 21 அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மதுரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏட்டு பால் பாண்டியன் இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.