சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் எ.வ. வேலு கடந்த திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: இங்கே பேசும் போது திமுக உறுப்பினர் இந்த மைக், டெபிள் செய்தது நாங்கள் தான் என்று சொல்கிறார்; இது மக்கள் வரி பணத்தில் தமிழக அரசால் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். திட்டங்கள் பெயர் மாற்றம் குறித்து பல உறுப்பினர் பலமுறை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். பெயர் மாற்றம் என்பது காலம் காலமாக நடப்பது; அம்மா பசுமை இல்லம், கருணாநிதி கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறி இருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளிக் ஆக மாறி இருக்கிறது.

இங்கே 10 இடங்களுக்கு போய் செல்வம் சேர்த்து வருகிறேன்; நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு என்று கூறி தமிழகத்தின் கல்வி கண் திறந்தவர் காமராஜர் பெயர் தான் காலை உணவு திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 232 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.