தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெறுகிறது. இதில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். தி.மு.க. இளைஞரணிச் செயலரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். விருதுநகா் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு வரவேற்கிறாா்.
இதில் அமைச்சா்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி, மு.பெ. சாமிநாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி என். சிவா, பாராளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை உறுப்பினா்கள் ஆ. ராசா, ப. செல்வராஜ், தி.மு.க. துணைப் பொதுச் செயலா் க. பொன்முடி, அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
தமிழக அமைச்சா்கள், திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா். இந்தக் கூட்டத்துக்காக கல்குறிச்சியில் சுமாா் 300 ஏக்கா் திடலில் மிகப் பெரிய அளவிலான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடிநீா், தற்காலிக கழிப்பறை, வாகன நிறுத்துமிட வசதிகள் உள்பட மாநாட்டுக்கு இணையான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.