கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் பிரஜித், தான் வரைந்த முதல்வர் ஸ்டாலினின் ஓவியத்தை அவரிடம் வழங்க வேண்டும் என்று காணொலி மூலம் கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து அதனை பார்த்த முதல்வர் அம்மாணவனை நேற்று நேரில் அழைத்து பாராட்டி நன்றாக படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என வாழ்த்தினார்.