பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர், நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதிகளில் உள்ள தொன்மையான தேவாலயங்களை புனரமைத்து பழுதுபார்ப்பதற்காக முதல் தவணை தொகையாக ரூ. ஒரு கோடியே 81 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.