பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரது மகள் விருதாம்பிகை ஜெ.குரு பட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில், புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த கட்சியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று முன்தினம் தொங்கப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் நேற்று ஓமலூரில் தொடக்க விழா நடந்தது. கட்சி தொடங்கியவுடன், சேலம் மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பையும் விருதாம்பிகை வெளியிட்டுள்ளார். நம் மக்களை ஒருங்கிணைக்க, நம் இல்லங்களை தேடி மாவீரன் மகள் குரு விருதாம்பிகை வருகிறார் என்ற பெயரில் இதனை அறிவித்துள்ளார். அன்புமணி, ராமதாஸ் மோதலால் பிரிந்து நிற்கும் நிர்வாகிகள், ஆதரவாளர்களை குறிவைத்து விருதாம்பிக்கை கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பா.ம.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூரில் ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது
January 10, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்