உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது.

ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது. உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடுகள் உறுப்பின​ராக உள்​ளன.

இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. சுகா​தா​ரம் தொடர்பான தகவல்​கள், அவற்றை பகிர்ந்து கொள்​ளுதல், அதன் மூலம் நோய் பரவல் தொடர்​பான எச்​சரிக்கை வெளி​யிடு​தல் போன்ற நடவடிக்​கைகளை உலக சுகா​தார அமைப்​புடன் நிறுத்​திக் கொண்​ட​தாக அமெரிக்க அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதன் மூலம் இந்த அமைப்​புடன் அமெரிக்கா​வுக்கு இருந்து வந்த 78 ஆண்டு தொடர்பு முடிவுக்கு வந்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் இந்த முடிவால் உலகள​வில் ஏற்​படும் நோய் பரவல், விஞ்​ஞானிகளின் பங்களிப்​பு, மருந்து நிறுவனங்​கள் தடுப்​பூசி தயாரிப்​பது போன்ற பணி​கள் கடுமை​யாக பாதிக்​கும் என்று ஜார்ஜ் டவுண் பல்​கலைக்​கழக பொது சுகா​தார சட்ட நிபுணர் லாரன்ஸ் கோஸ்​டின் கவலை தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் வில​கலால் உலகள​வில் போலியோ ஒழிப்​பு, குழந்​தைகள் உடல்​நலம், புதிய வைரஸ் பரவி​னால் உடனடி​யாக ஆராய்ச்சி மேற்​கொண்டு தடுப்​பூசி தயாரித்​தல் போன்ற பணி​கள் பாதிக்​கப்​படும் என்று நிபுணர்​கள் அஞ்​சுகின்​றனர். இதையடுத்​து, அமெரிக்க அதிபர் டிரம்ப்​ தனது முடிவை மறு​பரிசீலனை செய்​ய வேண்​டும்​ என்​று வலி​யுறு​த்​தி வருகின்​றனர்​.