பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதையடுத்து அவரை சிறையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற இன்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் 48 மணி நேரத்தில் அவரை சிறைச்சாலையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அவருடன் அவரது தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உடனிருக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.