இலங்​கை​யில் பெய்த கனமழை மிக​வும் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​யுள்​ளது. வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 463 பேர் உயி​ரிழந்​த​தாக​வும், நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போன​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, நிவாரணப் பணி​களை மேற்​கொள்ள இந்​தி​யா​விலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்​டிஆர்​எப்) அனுப்பி வைக்​கப்​பட்​டது. மேலும்​வெள்ள நிவாரணப் பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. வெள்​ளத்​தில் சிக்கி உயிருக்கு போ​ராடிய ஆயிரக்​கணக்​கானோரை இந்​திய படை மீட்ட நிலை​யில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இலங்​கை​யில் வெள்ள நிவாரண நடவடிக்​கை​யின்​போது வீட்​டில் தண்​ணீரில் தத்தளித்த பச்​சிளங் குழந்​தையை இந்​திய என்​.டி.ஆர்​.எப். வீரர் ஒரு​வர் கையில் ஏந்தி பத்​திர​மாக மீட்டு காப்பாற்​றி​னார். நெருக்​கடி நிலை​யின்​போது, இந்​தி​யா​வின் தூய மனித நேயம், தைரி​யம், இரக்கத்தை படம்​பிடித்து காட்​டும் ஒரு உன்னத தருணம் இது என்று பதி​விடப்​பட்​டுள்​ளது. இந்த வீடியோ வலை​தளங்​களில் தற்​போது வைரலாகி வரு​கிறது.