அ.தி.மு.க. பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரும் 28, 29 மற்​றும் 30 ஆகிய தேதி​களில் திருவள்ளூர், செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை புறநகர் மாவட்​டங்​களில் தேர்​தல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அ.தி.மு.க. பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான எடப்பாடி பழனி​சாமி மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம் என்ற தலைப்​பில், தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்கொண்டு வரு​கிறார். இந்நிலையில் வரும் 28-ம் தேதி முதல் 30 வரை திரு​வள்​ளூர், சென்னை மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ள உள்​ளார்.

அதன்​படி, வரும் 28-ம் தேதியன்று அ.தி.மு.க. திரு​வள்​ளூர் மேற்கு மாவட்​டத்​தில் திருத்​தணி மற்றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், 29-ம் தேதியன்று செங்​கல்​பட்டு கிழக்​கு, சென்னை புறநகர் மாவட்​டங்​களில் திருப்​போரூர் மற்​றும் சோழிங்​கநல்​லூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், 30-ம் தேதியன்று திரு​வள்​ளூர் வடக்கு மாவட்​டத்​தில் கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யிலும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ள​விருப்​ப​தாக அ.தி.மு.க. தலை​மைக்​கழகம் சார்​பில் அறிவிக்கப்​பட்​டுள்​ளது.