தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளே தமிழக அரசியல் களத்தை சுற்றி பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதற்கு தமிழக அரசியல் களத்திற்கு புதிய வரவான த.வெ.க.வும். ஒரு காரணம். இந்த நிலையில் காங்கிரஸ், த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்யை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. தி.மு.க.வோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் பேசவும் சொல்லவில்லை. இந்தியா கூட்டணியை சிதைக்க முடியாது; கூட்டணி வலுவாக உள்ளது; கூட்டணியை உடைக்க முடியாது. விஜய் - பிரவீன் சக்கரவத்தி சந்திப்பு குறித்து மேலிடத்திடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.