காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது. ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியன் முக்கிய நிர்வாகிகளுடன் காமகவை த.மா.கா.வில் இணைத்தார். அப்போது பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி இணைந்திருப்பது அரசியல் களத்தில் தமாகாவுக்கு வசந்த காலம் என்று தெரிவித்தார். தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசியய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.