இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அனுவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். அதிபர் புடினுக்கு நேற்றுமுன்தினம் இரவு அவர் சிறப்பு விருந்து அளித்​தார். அப்​போது இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​பிறகு டெல்லி ஐ.டி.சி மவுரியா ஓட்​டலில் அதிபர் புடின் நேற்​று முன்தினம் இரவு தங்கினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளி​கை​யில் நேற்று காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்​பிறகு மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புடின் அஞ்​சலி செலுத்தினார். இதன்​ பிறகு டெல்​லி​யில் உள்ள ஐதராபாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புடினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்​ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது