நாட்­டில் உள்ள 9 மாநி­லங்­கள், 3 யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் சார்' எனும் வாக்­கா­ளர்

பட்­டி­யல் சிறப்பு தீவிர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இதற்கு

எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றன. இந்த சூழ­லில் தான் எஸ்.ஐ.ஆர். பணி 37 ஆண்­டு­க­ளுக்கு பிறகு ஒரு­வரை தனது குடும்­பத்­து­டன் சேர்த்து வைத்­துள்­ளது

நாடு முழு­வ­தும் வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தம் பணி நடந்து வரு­கி­றது.

வாக்­கா­ளர்­க­ளாக இருப்­போர் அதற்­கான படி­வங்­களை வாங்கி முறை­யாக பூர்த்­தி­யிட்டு வழங்க வேண்­டும். அப்­போது தான் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெயர் இருக்­கும்.

இல்­லா­விட்­டால் ஓட்­டு­ரிமை என்­பது இருக்­காது. பீகாரை தொடர்ந்து தற்­போது 9

மாநி­லங்­கள், 3 யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் கடந்த 4-ம் தேதி இந்த பணி தொடங்­கி­யது.

சத்­தீஸ்­கர், கோவா, குஜ­ராத், கேரளா, மத்­திய பிர­தே­சம், ராஜஸ்­தான், தமிழ்­நாடு, உத்­தர பிர­தே­சம், மேற்கு வங்­கம் யூனி­யன் பிர­தே­சங்­க­ளான அந்­த­மான் நிகோ­பர் தீவு­கள்,

லட்­சத்­தீ­வு­கள், புதுச்­சேரி உள்­ளிட்ட இடங்­க­ளில் இந்த பணி நடந்து வரு­கி­றது. இங்கு மொத்­தம் 51 கோடி வாக்­கா­ளர்­க­ளின் வாக்­கு­ரி­மையை சரி­பார்க்­கும் பணி­யில் பி.எல்.ஓ எனும் வாக்­குச்­சா­வடி நிலை அலு­வ­லர் ஈடு­பட்டு வரு­கி­றது. இதற்கு தி.மு.க உள்­பட எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் தான் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­யால் 37 ஆண்­டு­க­ளாக பிரிந்து வாழ்ந்த மகனை குடும்­பத்­து­டன் சேர்த்து வைத்­துள்­ளது. மேற்கு வங்க மாநி­லம் கோபா­ரண்டா

கிரா­மத்தை சேர்ந்­த­வர் சக்­க­போர்த்தி. இவ­ரது மூத்த மகன் பெயர் விவேக். இவர் கடந்த1988-ம் ஆண்­டில் திடீ­ரென்று மாய­மா­னார். குடும்­பத்­தில் சண்­டை­யிட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்­றார். அதன்­பி­றகு அவர் மீண்­டும் வீடு திரும்­ப­வில்லை. விவேக்கை அவ­ரது பெற்­றோர் பல இடங்­க­ளில் தேடிப்­பார்த்­த­னர். ஆனால் எங்கு தேடி­யும் அவர் கிடைக்­க­வில்லை. இத­னால் குடும்­பத்­தி­னர் மன­வ­ருத்­தம் அடைந்­த­னர். அதன்­பி­றகு காலப்­போக்­கில் படிப்­ப­டி­யாக அதில் இருந்து மீண்டு வந்­த­னர். தற்­போது விவேக்,

கொல்­கத்­தா­வில் வசித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் தான் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் சிறப்பு தீவிர நட­வ­டிக்­கை­யில் தனது பெயரை சேர்க்க விவேக்­கின் மகன் தனது ஏரி­யா­வின் பி.எல்.ஓ பிர­தீப் என்­ப­வரை செல்­போன்

எண்­ணில் தொடர்பு கொண்­டார். அப்­போது அவர் விவேக்­கின் மகன் தனது தந்தை

குடும்­பத்தை விட்டு பிரிந்து வந்­த­தை­யும், தற்­போது தன்­னி­டம் அவர்­கள் பற்­றிய எந்த

விவ­ர­மும் இல்­லா­த­தை­யும் கூறி­னார். இரு­வ­ரும் நீண்­ட­நே­ரம் பேசி­னர். அப்­போது தான் பிர­தீப்­பிற்கு ஒரு விஷ­யம் தெரிந்­தது.

அதா­வது தனது அண்­ணன் பெய­ரும் விவேக் தான் என்­றும், அவர் சிறு­வ­ய­தி­லேயே வீட்டை விட்டு சென்­று­விட்­ட­தாக குடும்­பத்­தி­னர் கூறி­ய­தும் நினை­வுக்கு வந்­தது.

இதை­ய­டுத்து உட­ன­டி­யாக பிர­தீப், விவேக்கை நேரில் பார்க்க அழைத்­தார். இரு­வ­ரும்

சந்­தித்­த­னர். அப்­போது அவர்­கள் 2 பேரும் அண்­ணன் - தம்பி என்­பதை புரிந்து

கொண்­ட­னர். பிறகு பிர­தீப் தனது அண்­ணன் விவேக்கை வீட்­டுக்கு அழைத்து சென்­றார். 37 ஆண்­டு­க­ளுக்கு பிறகு விவேக் தனது பெற்­றோர் மற்­றும் குடும்­பத்­தி­னரை சந்­தித்­தார்.

இது­பற்றி விவேக் கூறு­கை­யி்ல், எனக்­கான மகிழ்ச்­சியை வார்த்­தை­க­ளால் விவ­ரிக்க

முடி­ய­வில்லை. கடந்த 37 ஆண்­டு­க­ளுக்கு பிறகு நான் எனது குடும்­பத்­து­டன்

சேர்ந்­துள்­ளேன். நான் எனது வீட்­டுக்கு திரும்பி உள்­ளது. நான் அனை­வ­ரி­ட­மும் பேசி

விட்­டேன். மகிழ்ச்­சி­யாக

இருக்­கி­றேன். எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை கொண்டு வந்த இந்­திய தேர்­தல்

ஆணை­யத்­துக்கு நன்றி. எஸ்.ஐ.ஆர். பணி வரா­விட்­டால் நான் எனது குடும்­பத்தை சந்­தித்து இருக்க மாட்­டேன் என்­றார்.