புது­டெல்லி, நவ.25

உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி பி.ஆர்.கவா­யின் பணி ஏற்­க­னவே நிறை­வ­டைந்து விட்­டது. இதை­ய­டுத்து 53–ஆவது தலைமை நீதி­ப­தி­யாக ேநற்­று­சூர்­ய­காந்த் பத­வி­யேற்­றார். ஜனா­தி­பதி மாளி­கை­யில் நடை­பெற்ற விழா­வில் அவ­ருக்கு ஜனா­தி­பதி திர­வு­பதி முர்மு பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

இந்­தி­யா­வின் 52-–ஆவது தலைமை நீதி­ப­தி­யாக நீதி­பதி பி.ஆர்.கவாய் 14.5.2025 அன்று பதவி ஏற்­றுக்­கொண்­டார். சட்­டத்­தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­து­தல் மற்­றும் குடி­மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­கள், மனித உரி­மை­கள் மற்­றும் சட்ட உரி­மை­க­ளைப் பாது­காத்­தல் உள்ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­கள் குறித்த அர­சி­ய­ல­மைப்பு அமர்வு தீர்ப்­பு­கள் உள்­பட சுமார் 300 தீர்ப்­பு­களை அவர் எழு­தி­யுள்­ளார்.

உலான்­பா­தர் (மங்­கோ­லியா), நியூ­யார்க் (அமெ­ரிக்கா), கார்­டிப் (யுகே) மற்­றும் நைரோபி (கென்யா) ஆகிய இடங்­க­ளில் பல்­வேறு சா்வதேச மாநா­டு­க­ளில் கலந்து கொண்­டார். கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கம் உள்­ளிட்ட பல்­வேறு பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மற்­றும் அமைப்­பு­க­ளில் பல்­வேறு அர­சி­ய­ல­மைப்பு மற்­றும் சுற்றுச்சூழல் பிரச்­னை­கள் குறித்து விரி­வு­ரை­களை வழங்­கி­யுள்­ளார்.

உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் நேற்று ஓய்வு பெற்­றார்.

உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் தலை­மை­யி­லான 5 நீதி­ப­தி­கள் அடங்­கிய அர­சி­யல் சாசன அமர்வு இம்­மா­தம் 20–ஆம் தேதி வழங்­கிய தீர்ப்­பில் மசோ­தாக்­கள் மீது முடி­வெ­டுக்க குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்­கும், ஆளு­ந­ருக்­கும் நீதித்­துறை காலக்­கெடு நிர்­ண­யிக்க முடி­யாது என அறி­வித்­தது.

நீதி­பதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெற்­ற­தைத் தொடர்ந்து, 53-ஆவது இந்­திய தலைமை நீதிபதியாக நீதி­பதி சூர்­ய­காந்த் நேற்­று­ப­த­வி­யேற்­றார். ஜனா­தி­பதி மாளி­கை­யில் நேற்று நடைபெற்ற விழா­வில் அவ­ருக்கு ஜனா­தி­பதி திர­வு­பதி முர்மு பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

இவ்­வி­ழா­வில் துணை ஜனா­தி­பதி சி.பி.ராதா­கி­ருஷ்­ணன், பிர­த­மர் நரேந்­திர மோடி மற்­றும் மத்­திய அமைச்­சர்­கள் மற்­றும் நீதி­ப­தி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

1962–ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 10–ஆம் தேதி அரி­யா­னா­வில் உள்ள பேட்­வார் கிரா­மத்­தில் சூர்­ய­காந்த் பிறந்­தார்.

அரி­யா­னா­வில் சட்­டம் பயின்று வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­றி­னார்.

பஞ்­சாப், அரி­யானா உயர்­நீ­தி­மன்ற நிரந்­தர நீதி­ப­தி­யாக 2004–ல் அவர் பத­வி­யேற்­றார். 2018–ல் இமாச்­ச­ல­பி­ர­தேச உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­தி­யாக அவர் பத­வி­யேற்­றார். 2019–ல் அவர் உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யா­னார். 2027–ஆம் ஆண்டு பிப்­ர­வரி 9–ஆம் தேதி வரை அவர் தலைமை நீதி­ப­தி­யாக பணி­யாற்­று­வார்.