மேற்​கு ​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.எல்​.ஏ. ஹு​மாயூன் கபிர் முர்​சி​தா​பாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற கட்​டிடம் கட்ட அடிக்​கல் நாட்​டி​னார். இதையடுத்து அவர் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில் அவர் ஜனதா உன்​னயன் என்ற பெயரில் புதிய கட்​சியை தொடங்​கி​னார்.

இது குறித்து பெலதங்​கா​வில் அவர் கூறும்​போது, எனது கட்சி சார்​பில் 8 வேட்​பாளர்​கள் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை தேர்​தலில் நிறுத்​தப்​படு​வர். நான் ரெஜிநகர் மற்​றும் பெலதங்கா தொகுதியில் போட்​டி​யிடு​வேன்​ என்​றார்​.