இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு பாதுகாப்பு கவலை காரணமாக தனது பயணத்தை ஒத்தி வைத்தார் பிரதமர் நெதன்யாகு. நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 9-ம் தேதி மற்றும் ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார். பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடியுடன் பேசினார். இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.