டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தின் மீது 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் வீரமரணடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பாராளுமன்ற தாக்குதல் நினைவாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.