தென்­காசி அருகே நேற்று ௨ தனி­யார் பஸ்­கள் நேருக்கு நேர் மோதிக்­கொண்­டன. இந்த விபத்­தில் பெண்­கள் உள்­பட 6பேர் பலி­யா­னார்­கள். 35 பேர் காய­ம­டைந்­த­னர். 5 பேர் கவலைக்­கி­ட­மான நிலை­யில் உள்­ள­னர்.

தென்­கா­சி­யில் இருந்து நேற்று காலை விரு­து­ந­கர் மாவட்­டம், ஸ்ரீவில்­லி புத்­தூ­ருக்கு ஒரு தனி­யார் பஸ் புறப்­பட்டு சென்­றது. இதே போல் தூத்­துக்­குடி மாவட்­டம் கோவில்­பட்­டி­யில் இருந்து தென்­கா­சிக்கு மற்­றொரு தனி­யார் பஸ் புறப்­பட்டு சென்­றது. இந்த 2 பஸ்­க­ளி­லும் ௧௦­௦–க்­கும் மேற்­பட்ட பய­ணி­கள் பய­ணம் செய்­த­னர்.

இந்த பஸ்­கள் தென்­கா­சிக்­கும், கடை­ய­நல்­லூ­ருக்­கும் இடையே இடைக்­கால் துரைசாமிபுரம் என்ற இடத்­தில் வந்து கொண்­டி­ருந்த போது நேருக்கு நேர் பயங்­க­ர­மாக மோதி­யது. அப்­போது பஸ்­சில் இருந்த பய­ணி­கள் அல­றி­னார்­கள். சில பய­ணி­கள் பஸ்­க­ளில் இருந்து தூக்கி வீசப்­பட்­ட­னர். இந்த கோர விபத்­தில் பெண்­கள் உள்­பட 6 பேர் அதே இடத்­தில் உடல் நசுங்கி இறந்­த­னர். இது குறித்து இலத்­தூர் போலீ­சா­ருக்கு தக­வல் கொடுக்கப்­பட்­டது.

தென்­காசி கலெக்­டர் கமல்­கி­ஷோர், போலீஸ் சூப்­பி­ரெண்டு அர­விந்த் மற்­றும் போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­னர். மீட்பு பணி­யி­லும் போலீ­சார் ஈடு­பட்­ட­னர். காயமடைந்தவர்கள் ஆம்­பு­லன்ஸ் மூலம் தென்­காசி அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர். பலி­யான ௬ பேர் உடல்­க­ளை­யும் போலீ­சார் மீட்டு பிரேத பரிசோதனைக்­காக அரசு மருத்­து­வ­னைக்கு அனுப்பி வைத்­த­னர். இத­னால் நீண்ட நேரம் அந்த பகு­தி­யில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. விபத்­தில் ௩௫–க்­கும் மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­டைந்­த­னர். அவர்­க­ளுக்கு அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. இவ ர்­க­ளில் 5 பேரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. மேல் சிகிச்­சைக்­காக நெல்லை பாளை­யங்­கோட்டை மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

விபத்­தில் பலி­யான 6 பேரில் 3 பேரின் பெயர் விவ­ரங்­கள் கிடைத்­து ள்­ளன. தென்­காசி புதுக்­கு­டி­ யைச் சேர்ந்த வன­ராஜ், கடையநல்லூரைச் சேர்ந்த தேன்­மொழி, புளி­யங்­கு­டி­யைச் சேர்ந்த மல்­லிகா, கற்­ப­க­வள்ளி மேலும் ௨ பேரின் பெயர் விவ­ரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து இலத்­தூர் போலீ­சார் வழக்குப்­ப­திவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்­ப­டுத்­திய 2 பஸ்களின் உரி­மங்­க­ளை­யும் ரத்து செய்ய போலீசார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர்.