புயல் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பொது மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்திடும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தினார்