தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார். பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து வெங்கட்ராமனுக்கு பதில் பொறுப்பு டி.ஜி.பியாக அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.ஜி.பி.யான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.