வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு (எஸ்.​ஐ.ஆர்) கூடு​தல் ஊழியர்​களை நியமிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) ரத்து செய்​யக் கோரி தி.மு.க.வின் அமைப்பு செய​லா​ளர் ஆர்.எஸ்.பார​தி, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்வபெருந்​தகை, புதுச்​சேரி தி.மு.க. அமைப்​பாளர் ஆர்.சிவா, மனித நேய மக்​கள் கட்​சின் தலை​வர் எம்​.எச். ஜவஹருல்​லா, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ் மாநில செய​லா​ளர் பி.சண்​முகம், மனிதநேய மக்​கள் கட்​சி​யின் தமிமூன் ஹன்​சா​ரி, இந்​திய கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் எம்.வீர​பாண்​டியன், தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன், விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் நிறுவன தலை​வர் தொல் திரு​மாவளவன், த.வெ.க தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்​களை தாக்​கல் செய்துள்​ளனர்.

இந்​நிலை​யில், பீகார், மேற்கு வங்க மாநிலங்​கள் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்த மனுக்​களு​டன், எஸ்​.ஐ.ஆரை தள்ளி வைக்க கோரும் கேரள அரசு மனுவுடன் தமிழக அரசி​யல் கட்​சிகள் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனுக்​களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது. அனைத்து தரப்பு வாதங்​களுக்கு பிறகு தலைமை நீதிப​தி, மாநில அரசு தனக்​குள்ள கடமையி​லிருந்து தப்​பித்​துக் கொள்ள முடி​யாது என்று குறிப்​பிட்​டதுடன், வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் ஈடு​பட்​டுள்ள ஊழியர்​களின் பணி நேரத்தை குறைக்க கூடு​தல் ஊழியர்​களை நியமிப்​பதை மாநில அரசுகள் பரீசிலிக்க வேண்​டும்.

எஸ்.​ஐ.ஆர் பணியி​லிருந்து விலக்​களிக்க கோரும் ஊழியர்​களின் கோரிக்​கையை தனித்​தனி​யாக தேர்​தல் ஆணை​ய​மும், மாநில அரசும் பரிசீலித்​து, அவர்​களுக்கு பதிலாக வேறு ஊழியரை பணி​யமர்த்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட உத்​தர​வு​களை பிறப்​பித்​து வி​சா​ரணை​யை வரும் 9-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​தார்​.