வரும் மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​.ஐ.ஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்த சூழலில் மேற்​கு​வங்​கத்​தின் கிருஷ்ணாநகரில் நடை​பெற்ற திரிண​மூல் காங்​கிரஸ் பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது:

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் ஒரு கண்​ணில் துரியோதனனும் மறுகண்​ணில் துச்சாதனனை​யும் பார்க்​கலாம். அவர் மிக​வும் ஆபத்​தானவர். அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு மேற்​கு​வங்​கத்​தில் எஸ்​.ஐ.ஆர் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. வங்​கதேச மக்​களை முகாம்​களில் அடைப்​போம் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா எச்​சரிக்கை விடுக்​கிறார். பா.ஜ.க​.வுக்கு ஆதர​வான மத்​திய அரசின் மூத்த அரசு அதி​காரி​கள் மேற்​கு​வங்​கத்​தில் முகாமிட்டு மாவட்ட கலெக்டர்களுக்கு நிர்​பந்​தம் அளித்து வரு​கின்​றனர்.

நான் இது​வரை எஸ்.​ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்​ய​வில்​லை. எனது குடி​யுரிமையை நிரூபிக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. எஸ்.​ஐ.ஆர் என்ற பெயரில் மேற்​கு​வங்க பெண்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது. ஒரு​வேளை வாக்​காளர் பட்​டியலில் உங்​கள் பெயர் நீக்​கப்​பட்​டால், சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட தயாராக இருக்க வேண்​டும். முன்​வரிசை​யில் பெண்​களும், அவர்​களுக்கு பக்​கபல​மாக பின்​வரிசை​யில் ஆண்​களும் களமிறங்க வேண்​டும்.

சாதாரண வங்க புலியை​விட, அடிபட்ட வங்க புலி ஆக்​ரோஷ​மானது. நீங்​கள் எங்​களை தாக்​கி​னால் எப்​படி பதில் அளிக்க வேண்​டும் என்​பது எங்​களுக்கு தெரி​யும். அநீ​தியை தடுத்து நிறுத்துவோம். இந்த நேரத்​தில் பொது மக்​கள் யாரும் எல்லை பாது​காப்பு படை​யின் நிலைகளுக்கு செல்ல வேண்​டாம். இது மிக​வும் ஆபத்தானது. இவ்​வாறு அவர் பேசி​னார்​.